ஆன்மிகம்
கன்னியாகுமரி கோவிலில் பகவதி அம்மன் வாகன பவனி

கன்னியாகுமரி கோவிலில் பகவதி அம்மன் வாகன பவனி

Published On 2020-10-20 04:31 GMT   |   Update On 2020-10-20 04:31 GMT
கன்னியாகுமரி பகவதி அம்மன் பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளிப்பிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை பவனி வந்தார்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவில் 3 -வது நாளான நேற்று அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு வணிக வரித்துறை சார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

இரவு 8 மணிக்கு பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளிப்பிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை பவனி வந்தார்.

நிகழ்ச்சியில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அழகேசன், சதாசிவம், கோவில் மேலாளர் ஆறுமுகநயினார், பொருளாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News