உள்ளூர் செய்திகள்
தற்கொலை

காதல் தோல்வியால் ஆட்டோ டிரைவர் தற்கொலை

Published On 2021-12-29 03:30 GMT   |   Update On 2021-12-29 03:30 GMT
காதல் தோல்வியால் ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:

புதுவை கோவிந்தசாலை பகத்சிங் வீதியை சேர்ந்தவர் ஆயிஷா (வயது 50). இவரது மகன் செய்யது ரியாசுதீன் (வயது 28). ஆட்டோ டிரைவர். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டதால் இருவரும் பிரிந்துவிட்டனர். காதல் தோல்வி காரணமாக செய்யது ரியாசுதீன் மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று அவர் பஸ்நிலைய பகுதியில் வைத்து எலிமருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றார். இதில் மயங்கி விழுந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News