செய்திகள்
மின்சாரம் தாக்கி பலி

தர்மபுரி அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி

Published On 2021-02-23 02:25 GMT   |   Update On 2021-02-23 02:25 GMT
தர்மபுரி அருகே மின்சாரம் தாக்கி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி:

தர்மபுரி அருகே உள்ள சின்னகுரும்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நாகம்மாள் (வயது 53). இவர் தனது வீட்டின் அருகே உள்ள நிலத்தில் புல் அறுக்க சென்றார். நீண்ட நேரமாகியும் மீண்டும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் அங்கு சென்று தேடினர். அப்போது அருகே உள்ள ஒரு விவசாய நிலத்தில் நாகம்மாள் மின்சாரம் தாக்கி இறந்து கிடப்பது தெரியவந்தது. இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீசார் விரைந்து சென்று நாகம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News