செய்திகள்
கோப்புபடம்

வெள்ளகோவிலில் வேன் மோதி வாலிபர் சாவு

Published On 2021-09-26 07:44 GMT   |   Update On 2021-09-26 07:44 GMT
வெள்ளகோவில்-மூலனூர் ரோட்டில், சேரன் நகர் என்ற இடத்தில் செல்லும் போது எதிரில் வந்த வேன் நவநீதகிருஷ்ணன் மீது மோதியது.
வெள்ளகோவில்:

வெள்ளகோவில் அருகே உள்ள அக்கரைபாளையத்தை சேர்ந்த  மனோகரன் மகன் நவநீதகிருஷ்ணன் (வயது 29). இவர் நேற்று இரவு சொந்த வேலையாக பைக்கில் வெள்ளகோவில் வந்து விட்டு வீட்டுக்கு செல்வதற்காக வெள்ளகோவில்-மூலனூர் ரோட்டில், சேரன் நகர் என்ற இடத்தில் செல்லும் போது எதிரில் வந்த வேன் நவநீதகிருஷ்ணன் மீது மோதியது.

இதில் காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்  நவநீதகிருஷ்ணன் இறந்துவிட்டதாக  தெரிவித்தார். இதுகுறித்து வெள்ளகோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
Tags:    

Similar News