செய்திகள்
டிஎன்பிஎல் கிரிக்கெட்

டிஎன்பிஎல் கிரிக்கெட்: திண்டுக்கல் அணிக்கு 146 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது திருச்சி

Published On 2021-07-27 16:54 GMT   |   Update On 2021-07-27 16:54 GMT
146 ரன்கள் என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி விளையாடி வருகிறது.

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இன்று இரவு நடைபெறும் 11வது ஆட்டத்தில்  திருச்சி வாரியர்ஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் பீல்டிங் செய்ய முடிவு செய்தது.

பேட்டிங்கை தேர்வு செய்த திருச்சி வாரியர்ஸ் அணி 20 ஒவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக நிதீஷ் ராஜகோபால் 45 ரன்கள் எடுத்தார். முகமத் கான் 26 ரன்களும் சுமத் ஜெயின் 22 ரன்களும் எடுத்துள்ளார்கள்.

இதை அடுத்து 146 ரன்கள் என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்கியது.
Tags:    

Similar News