உள்ளூர் செய்திகள்
தருமபுரி மாவட்டம் இண்டூரில் பதுக்கி வைத்திருந்த 10 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நல்லம்பள்ளி,
தருமபுரி மாவட்டம்,நல்லம்பள்ளி வட்டம்,இண்டூரை சேர்ந்தவர் அப்துல் ஆசிப்(வயது 35) மளிகை கடை நடத்தி வருகிறார்.இவரது கடையில் தடை செய்ய குட்கா போதை பொருள் விற்பனை செய்வதாக இண்டூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் கடை மற்றும் குடோனில் சோதனை செய்தனர். இதில் சுமார் 10 கிலோ குட்காவை போலீசார் கண்டுபிடிதது பறிமுதல் செய்தனர்.
பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்துல்ஆசிப்பை கைது செய்தனர்.