செய்திகள்
நெல்லை, தென்காசி மாவட்டத்தில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை நாளை பிரசாரம்
பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை நெல்லை மாவட்டத்தில் நாளை சூறாவளி பிரசாரம் செய்கிறார்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
தி.மு.க. சார்பில் தேர்தல் பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மனோ.தங்கராஜ் ஆகியோர் நெல்லை மாவட்டத்தில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அப்துல் வகாப் எம்.எல்.ஏ., ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. ஆகியோரும் சூறாவளி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அ.தி.மு.க.வைச் சேர்ந்த எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் ஆகியோரும் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
கொரோனா ஊரடங்கு நேரம் என்பதால், முக்கிய பிரமுகர்கள் வழக்கமான தேர்தல் பிரசாரம் செய்யாமல், முக்கிய பகுதிகளில் கூட்டங்கள் நடத்தி பிரசாரம் செய்து வருகிறார்கள்.
வேட்பாளர்கள், அவர்களது ஆதரவாளர்கள் கிராமங்களில் வீதி வீதியாக சென்று தங்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள்.
பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை நாளை (புதன்கிழமை) நெல்லை மாவட்டத்தில் சூறாவளி பிரசாரம் செய்கிறார்.
காலை 8 மணிக்கு கே.டி.சி. நகர் பகுதியில் பிரசாரம் செய்கிறார். 9 மணிக்கு பாளை என்.ஜி.ஓ. காலனியில் தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
10 மணிக்கு மானூர், ராமையன்பட்டியில் பிரசாரம் செய்கிறார். 12 மணி அளவில் சேரன்மாதேவி பகுதியிலும், பிற்பகல் 1 மணி அளவில் அம்பை பகுதியிலும் தேர்தல் பிரசாரம் செய்து வாக்கு சேகரிக்கிறார்.
பின்னர் தென்காசி மாவட்டம் சுரண்டையில் பிரசாரம் செய்கிறார். தொடர்ந்து மாலை 4 மணிக்கு கடையநல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆணைகுளம், 5 மணிக்கு அரிய நாயகிபுரம், மாலை 6 மணிக்கு புண்ணையாபுரம், இரவு 7 மணிக்கு வாசுதேவநல்லூர் அருகே ராமநாதபுரம் பகுதிகளில் பிரசாரம் செய்து ஓட்டு சேகரிக்கிறார்.
நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
தி.மு.க. சார்பில் தேர்தல் பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மனோ.தங்கராஜ் ஆகியோர் நெல்லை மாவட்டத்தில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அப்துல் வகாப் எம்.எல்.ஏ., ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. ஆகியோரும் சூறாவளி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அ.தி.மு.க.வைச் சேர்ந்த எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் ஆகியோரும் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
கொரோனா ஊரடங்கு நேரம் என்பதால், முக்கிய பிரமுகர்கள் வழக்கமான தேர்தல் பிரசாரம் செய்யாமல், முக்கிய பகுதிகளில் கூட்டங்கள் நடத்தி பிரசாரம் செய்து வருகிறார்கள்.
வேட்பாளர்கள், அவர்களது ஆதரவாளர்கள் கிராமங்களில் வீதி வீதியாக சென்று தங்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள்.
பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை நாளை (புதன்கிழமை) நெல்லை மாவட்டத்தில் சூறாவளி பிரசாரம் செய்கிறார்.
காலை 8 மணிக்கு கே.டி.சி. நகர் பகுதியில் பிரசாரம் செய்கிறார். 9 மணிக்கு பாளை என்.ஜி.ஓ. காலனியில் தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
10 மணிக்கு மானூர், ராமையன்பட்டியில் பிரசாரம் செய்கிறார். 12 மணி அளவில் சேரன்மாதேவி பகுதியிலும், பிற்பகல் 1 மணி அளவில் அம்பை பகுதியிலும் தேர்தல் பிரசாரம் செய்து வாக்கு சேகரிக்கிறார்.
பின்னர் தென்காசி மாவட்டம் சுரண்டையில் பிரசாரம் செய்கிறார். தொடர்ந்து மாலை 4 மணிக்கு கடையநல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆணைகுளம், 5 மணிக்கு அரிய நாயகிபுரம், மாலை 6 மணிக்கு புண்ணையாபுரம், இரவு 7 மணிக்கு வாசுதேவநல்லூர் அருகே ராமநாதபுரம் பகுதிகளில் பிரசாரம் செய்து ஓட்டு சேகரிக்கிறார்.