செய்திகள்
உதயநதி ஸ்டாலின்

எடப்பாடி பழனிசாமி, சசிகலா குறித்து அவதூறாக பேசியதாக உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு

Published On 2021-01-12 11:58 GMT   |   Update On 2021-01-12 11:58 GMT
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்தும், சசிகலா குறித்தும் அவதூறாக பேசியதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலா ஆகியோர் குறுித்து அவதூறாக பேசியதாக வீடியோ ஒன்று வெளியானது. இதற்கு உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ஆனால், யார் மனதையாவது புண்படுத்தும் வகையில் இருந்தால், வருத்தம் தெரிவிப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதற்கிடையில் ராஜலட்சுமி என்பவர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக காவல்துறையில் புகார் அளித்திருந்திருந்தார். இதனடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Tags:    

Similar News