செய்திகள்
கல்லூரியில் சேர்ந்த 10 நாளில் என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை
கோவை அருகே காதலி தற்கொலை செய்ய போவதாக கூறியதால் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கருமத்தம்பட்டி:
பெரம்பலூர் மாவட்டம் முருகன்குடி அருகே உள்ள குன்னத்தை சேர்ந்தவர் மல்லமுத்து. இவரது மகன் பாவேந்தன் (வயது 18). இவர் கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 11-ந் தேதி தான் கல்லூரி திறக்கப்பட்டது. பாவேந்தன் கல்லூரியில் உள்ள தங்கும் விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார். இவரும், அவரது ஊரை சேர்ந்த பெண் ஒருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 பேருக்கும் இடையே செல்போனில் தகராறு ஏற்பட்டது. இதனால் மாணவி பாவேந்தனுடன் பேசுவதை தவிர்த்து வந்தார். இதன்காரணமாக அவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். நேற்று மாலை இவரை தொடர்பு கொண்ட மாணவி தான் தற்கொலை செய்யப்போவதாக கூறியதாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த பாவேந்தன் தான் தங்கி இருந்த அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் இது குறித்து கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட பாவேந்தனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெரம்பலூர் மாவட்டம் முருகன்குடி அருகே உள்ள குன்னத்தை சேர்ந்தவர் மல்லமுத்து. இவரது மகன் பாவேந்தன் (வயது 18). இவர் கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 11-ந் தேதி தான் கல்லூரி திறக்கப்பட்டது. பாவேந்தன் கல்லூரியில் உள்ள தங்கும் விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார். இவரும், அவரது ஊரை சேர்ந்த பெண் ஒருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 பேருக்கும் இடையே செல்போனில் தகராறு ஏற்பட்டது. இதனால் மாணவி பாவேந்தனுடன் பேசுவதை தவிர்த்து வந்தார். இதன்காரணமாக அவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். நேற்று மாலை இவரை தொடர்பு கொண்ட மாணவி தான் தற்கொலை செய்யப்போவதாக கூறியதாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த பாவேந்தன் தான் தங்கி இருந்த அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் இது குறித்து கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட பாவேந்தனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.