செய்திகள்
கோப்பு படம்.

நடுவீரப்பட்டு அருகே குட்டையில் மூழ்கி டிரைவர் பலி

Published On 2021-01-09 17:17 GMT   |   Update On 2021-01-09 17:17 GMT
நடுவீரப்பட்டு அருகே குட்டையில் குளித்த டிரைவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லிக்குப்பம்:

நடுவீரப்பட்டு அடுத்த கீழ்பத்திரக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜ் (வயது 35). பொக்லைன் எந்திர டிரைவர் சம்பவத்தன்று இவர் குழந்தைகுப்பம் பகுதியில் உள்ள குட்டையில் குளிக்க சென்றார். அப்போது அவர் திடீரென நீாில் மூழ்கினார். 

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று ராஜியை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

இது குறித்த புகாரின் பேரில் நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News