செய்திகள்
கோப்பு படம்.

தொட்டியத்தில் மாயமான சிறுமி 2 மணி நேரத்தில் மீட்பு

Published On 2020-11-21 14:03 GMT   |   Update On 2020-11-21 14:53 GMT
தொட்டியத்தில் மாயமான 8 வயது சிறுமியை போலீசார் 2 மணி நேரத்தில் மீட்டதால் போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
தொட்டியம்:

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள அருங்கூர்கை என்ற கிராமத்தை சேர்ந்தவர் சங்கர், கரும்பு வெட்டும் தொழிலாளியான இவர் நேற்று காலை தனது மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் கரும்பு வெட்டுவதற்காக தொட்டியம் பஸ் நிலையத்திற்கு வந்தார்.

அப்போது அவரின் 8 வயது மகள் மஞ்சுமாதா என்ற சிறுமியை கடைவீதியில் ஓரமாக நிற்க வைத்துவிட்டு கடையில் சென்று பொருட்கள் வாங்கினார். சுமார் ½ மணி நேரம் கழித்து வந்து பார்த்த போது சிறுமியை காணவில்லை.

அப்போது தொட்டியம் கடைவீதியில் பணியில் இருந்த போலீஸ்காரர் ராஜ்குமாரிடம் சங்கர் விசாரித்தார். அவர் துரிதமாக செயல்பட்டு காணாமல் போன குழந்தையை 2 மணி நேரத்தில் மீட்டு தொட்டியம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தார். தொட்டியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிராங்கிளின் உட்ரோ வில்சன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் குமார் முன்னிலையில், குழந்தையின் குடும்பத்தாரிடம் சிறுமி மஞ்சு மாதாவை ஒப்படைத்தனர். விரைவாக செயல்பட்டு 2 மணி நேரத்தில் காணாமல் போன சிறுமியை மீட்ட போலீஸ்காரர் ராஜ்குமாரை காவலர் துறையினர் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.
Tags:    

Similar News