செய்திகள்
மழை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Published On 2021-04-08 07:19 GMT   |   Update On 2021-04-08 07:19 GMT
தமிழகம் மற்றும் புதுவை, காரைக்காலில் இன்று பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழகம் மற்றும் புதுவை, காரைக்காலில் இன்று பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். வளிமண்டல சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.



மற்ற மாவட்டங்கள், புதுவை, காரைக்காலில் வறண்ட வானிலை நிலவும்.சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Tags:    

Similar News