செய்திகள்
கருப்பு பூஞ்சை

சேலம் மாவட்டத்தில் இதுவரை கருப்பு பூஞ்சை நோய்க்கு 150 பேர் பாதிப்பு

Published On 2021-06-09 11:28 GMT   |   Update On 2021-06-09 11:28 GMT
கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் பலர் கருப்பு பூஞ்சை என்ற நோயாலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
சேலம்:

சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு தினமும் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் பலர் கருப்பு பூஞ்சை என்ற நோயாலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மாவட்டத்தில் நேற்று கருப்பு பூஞ்சை நோய்க்கு மேலும் 5 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 4 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும், ஒருவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்களில் 4 பேர் சேலத்தை சேர்ந்தவர்கள் ஆவர். மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News