உள்ளூர் செய்திகள்
அதிமுக

கடலூர் தெற்கு, மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. புதிய நிர்வாகிகள் அறிவிப்பு

Published On 2022-04-15 10:22 GMT   |   Update On 2022-04-15 10:22 GMT
கடலூர் தெற்கு மாவட்டம், பண்ருட்டி தெற்கு ஒன்றிய புதிய அ.தி.மு.க. நிர்வாகிகளை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளனர்.
கடலூர்:

அ.தி.மு.க. புதிய நிர்வாகிகள் தேர்வு குறித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அதன்படி கடலூர் தெற்கு மாவட்டம், பண்ருட்டி தெற்கு ஒன்றிய புதிய அ.தி.மு.க. நிர்வாகிகள் வருமாறு:-

ஒன்றிய அவைத்தலைவர்- குருநாதன், ஒன்றியச் செயலாளர்- கமலக்கண்ணன், ஒன்றிய இணைச் செயலாளர் -ஜெயமதி இராஜமணி கண்டன், ஒன்றிய துணைச் செய லாளர்கள்-தேவி மாணிக்கவேல், அண்ணாமலை, ஒன்றியப் பொருளாளர்- குருமூர்த்தி, மாவட்டப் பிரதிநிதிகள்-தமிழ்செல்வி, கருணாநிதி, கோவிந்தவேலு.

கடலூர் மேற்கு ஒன்றிய புதிய அ.தி.மு.க. நிர்வாகிகள் வருமாறு:-

ஒன்றிய அவைத்தலைவர்- ஆனந்தன், ஒன்றியச் செய லாளர்-வினோத், ஒன்றிய இணைச் செயலாளர்- சரளா, ஒன்றிய துணைச் செயலாளர்கள்-வளர்மதி பழனிவேல், காரை மு. சண்முகம், ஒன்றியப் பொருளாளர்-சீத்தாராமன், மாவட்டப் பிரதிநிதிகள்-மலர்கொடி சேட்டு, குருநாதன், மாயவேலு.

இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News