ஆன்மிகம்
தேவியர்களுடன் வியூக சுந்தரராஜபெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.

கூடலழகர் பெருமாள் கோவிலில் பக்தர்கள் கூட்டம்

Published On 2020-09-21 06:30 GMT   |   Update On 2020-09-21 06:30 GMT
புரட்டாசி மாதத்தையொட்டி கூடலழகர் பெருமாள் கோவிலில் தேவியர்களுடன் வியூக சுந்தரராஜபெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம். எனவே அன்றைய தினம் பெருமாள் கோவில்களில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கோவிலுக்குள் செல்லும் பக்தர்கள் கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்தநிலையில் நேற்று புரட்டாசி முதல் சனிக்கிழமை என்பதால் அனைத்து பெருமாள் கோவில்களிலும் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் அதிகாலையில் இருந்து பக்தர்கள் சாமியை தரிசிக்க கோவிலுக்கு வந்திருந்தனர். ஆனால் அவர்கள் அனைவரும் காலை 6 மணிக்கு மேல் தான் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

இதனால் பக்தர்கள் கூட்டம் கோவிலில் இருந்து பெரியார் பஸ்நிலையம் வரை நீண்ட வரிசையில் இருந்தது. எனவே பக்தர்கள் வெகுநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
Tags:    

Similar News