தமிழ்நாடு
கொடிவேரி தடுப்பணையில் ஆர்பரித்து கொட்டும் தண்ணீரை காணலாம்

பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு- கொடிவேரி அணையில் குளிக்க தடை நீடிப்பு

Published On 2021-12-07 05:14 GMT   |   Update On 2021-12-07 05:14 GMT
கொடிவேரி அணையில் 2 மாதமாக குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கோபி:

கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை உள்ளது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் தினமும் ஏராளமானோர் தங்கள் குடும்பத்துடன் வந்து தடுப்பணையில் குளித்து மகிழ்வார்கள்.

அணை பகுதியில் விற்கப்படும் மீன்களை சாப்பிடுவதற்கு என்றே ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

இந்த நிலையில் பவானிசாகர் அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. மேலும் கோபி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதனால் தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. தடுப்பணையில் அதிகளவு தண்ணீர் கொட்டி வருவதால் ஏற்கனவே தடுப்பணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பவானிசாகர் அணையில் இருந்து இன்று 6 ஆயிரம் கனஅடிக்கு மேல் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் தடுப்பணையில் தண்ணீர் அதிகளவு ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கொடிவேரி தடுப்பணையில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து 58 நாட்களாக இந்த தடை நீடித்து வருகிறது.

இதனால் தடுப்பணைக்கு செல்லும் நுழைவு வாயில் அடைக்கப்பட்டு உள்ளே செல்ல தடை என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது.

2 மாதமாக கொடிவேரி அணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News