செய்திகள்
தற்கொலை

கெலமங்கலம் அருகே தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

Published On 2021-05-04 10:31 GMT   |   Update On 2021-05-04 10:31 GMT
கெலமங்கலம் அருகே தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராயக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை தாலுகா கெலமங்கலம் சின்னட்டியை சேர்ந்தவர் சங்கரய்யா (வயது 29). இவர் அக்கொண்டப்பள்ளியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சசிகலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு குழந்தைகள் இல்லை. இந்தநிலையில் சங்கரய்யா உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி சசிகலா கெலமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News