செய்திகள்
ஸ்ரீரங்கம் அருகே எலி மருந்தை தின்ற பிளஸ்-1 மாணவி பலி
ஸ்ரீரங்கம் அருகே அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதால் எலி மருந்தை தின்ற பிளஸ்-1 மாணவி பலியானார்.
ஸ்ரீரங்கம்:
திருச்சி திருவானைக்காவல் நெல்சன் ரோடு பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகள் ஆனந்தபைரவி (வயது 15). பிளஸ்-1 படித்து வந்தார்.
இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆனந்த பைரவிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதாக தெரிகிறது.
இதில், மனமுடைந்த அவர், எலி மருந்தை(விஷம்) தின்று விட்டு வீட்டில் மயங்கிக் கிடந்தார். அவரை, உறவினர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை மாணவி உயிரிழந்தார். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.