செய்திகள்
கோப்புப்படம்

வேலூர்-திருவண்ணாமலை மாவட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 18 பேர் இடமாற்றம்

Published On 2019-11-12 11:08 GMT   |   Update On 2019-11-12 11:08 GMT
வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 18 பேரை இடமாற்றம் செய்து டி.ஐ.ஜி. காமினி உத்தரவிட்டுள்ளார்.
வேலூர்:

வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 18 பேரை இடமாற்றம் செய்து டி.ஐ.ஜி. காமினி உத்தரவிட்டுள்ளார்.

காத்திருப்போர் பட்டியலில் இருந்த நிர்மலா திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேலும் காத்திருப்போர் பட்டியலில் இருந்த இன்ஸ்பெக்டர் ஷாஜாதி திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவுக்கும், இன்ஸ்பெக்டர் நாகராஜன் வேலூர் பொருளாதார குற்றப்பிரிவுக்கும், இன்ஸ்பெக்டர் கோவிந்த சாமி லத்தேரி போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்னர்.

திருவண்ணாமலை இன்ஸ்பெக்டர் சியாமளா குடியாத்தம் மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், லத்தேரி இன்ஸ்பெக்டர் மனோன்மணி பள்ளி கொண்டாவுக்கும், திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அல்லிராணி திருவண்ணாமலை தெள்ளார் போலீஸ் நிலையத்துக்கும், செய்யாறு கலால் பிரிவு மங்கையர்க்கரசி திருவண்ணாமலை மகளிர் போலீஸ் நிலையத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

அங்கிருந்த தமிழரசி கே.வி.குப்பத்துக்கும், போளூர் கலால் பிரிவு பிரேமா திருவண்ணாமலை ஏ.சி.டி.யு. பிரிவுக்கும், அங்கு பணியாற்றிய கவிதா போளூர் கலால் பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கனிமொழி திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவுக்கும், அங்கு பணியாற்றிய பவுலின் வேலூருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் லட்சுமி வேலூர் தெற்கு போலீஸ் நிலைய குற்றப்பிரிவுக்கும், கண்ணமங்கலம் சாலமோன் ராஜா செங்கத்துக்கும், அங்கு பணியாற்றிய ஹேமாவதி கண்ணமங்கலத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

கே.வி.குப்பம் இன்ஸ்பெக்டர் கவிதா செய்யாறு கலால் பிரிவுக்கும், வேலூர் பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் காத்திருப்போர் பட்டியலுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News