ஆன்மிகம்
பைரவர்

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி நிகழ்ச்சி நாளை நடக்கிறது

Published On 2021-11-26 05:48 GMT   |   Update On 2021-11-26 05:48 GMT
ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தேய்பிறை அஷ்டமியையொட்டி நாளை கணபதி ஹோமம், ருத்ர ஹோமம், பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.
ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தேய்பிறை அஷ்டமி நிகழ்ச்சி நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இதனையொட்டி மாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம், ருத்ர ஹோமம், பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், தொடர்ந்து 6.30. மணிக்கு அலங்கார தீபாராதனை, சாயரட்சை தீபாராதனை, மற்றும் பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.

இதற்கான ஏற்பாட்டை விழா குழுவினர் செய்துள்ளனர்.
Tags:    

Similar News