செய்திகள்
பொங்கல் பண்டிகை

பொங்கல் பண்டிகை: பங்காரு அடிகளார்-சரத்குமார் வாழ்த்து

Published On 2021-01-12 10:24 GMT   |   Update On 2021-01-12 10:24 GMT
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக மக்களுக்கு பங்காரு அடிகளார் மற்றும் சரத்குமார் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை:

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட ஆன்மிக குரு பங்காரு அடிகளார் விடுத்துள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

உள்ளத்தில் தெளிவும், பண்பும், அமைதியும், நிம்மதியும் எப்போதும் இருக்க வேண்டும். இந்த ஆண்டு அமைதி கிடைக்க வேண்டும். ஒருவரை ஒருவர் மன்னித்து, ஒருவரை ஒருவர் ஏமாற்றாமல் வாழ வேண்டும். தொழில் வளர வேண்டும். கொரோனா நோயில் இருந்து எங்களைக் காப்பாற்றி அருள் புரிய வேண்டும் தாயே என்று வணங்க வேண்டும். இந்தப் பொங்கல் திருநாளில் அனைவரையும் வாழ்த்துகிறோம்.

சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்:-

இயற்கையை வணங்கிய தமிழனின் தொன்மையான வரலாற்றை போற்றி நமது கலாசாரமும், நாகரிகமும் என்றும் தொடர, தமிழ் இனத்தின் தனிப்பெரும் விழாவான பொங்கல் திருநாளிலே உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும், உழவர்களுக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News