உள்ளூர் செய்திகள்
நாட்டறம்பள்ளி அருகே சாராயம் விற்றவர் கைது
நாட்டறம்பள்ளி அருகே சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் நேற்று நாட்டறம்பள்ளி பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது கள்ளியூர் பகுதியில் சாராயம் விற்பனை செய்ததாக கள்ளியூர் பொம்மி வட்டம் பகுதியை சேர்ந்த முனிசாமி (வயது 57) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 10 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.