செய்திகள்
கொரோனா தடுப்பூசி

வடகரை, ஆந்தக்குடி ஊராட்சிகளில் கொரோனா தடுப்பூசி முகாம்

Published On 2021-06-08 11:36 GMT   |   Update On 2021-06-08 11:36 GMT
கீழ்வேளூர் ஒன்றியம் வடகரை ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
சிக்கல்:

கீழ்வேளூர் ஒன்றியம் வடகரை ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமை ஊராட்சி தலைவர் பாண்டியன் தொடங்கி வைத்தார். இந்த முகாமில் தேவூர் அரசு மருத்துவமனை மருத்துவர் சந்திரமவுலி மற்றும் மருத்துவ குழுவினர்கள் கலந்து கொண்டு 211 பேருக்கு தடுப்பூசி போட்டனர். இதில் ஒன்றிய கவுன்சிலர் கருணாநிதி, ஊராட்சி துணை தலைவர் சிவசக்தி மோகன், ஊராட்சி செயலர் மாதவன் ஊராட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதேபோல கீழ்வேளூர் ஒன்றியம் ஆந்தக்குடி ஊராட்சி திருபஞ்சனம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

முகாமை ஊராட்சி தலைவர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். முகாமில் தேவூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அகிலன், ரோகிணி மற்றும் மருத்துவ குழுவினர்கள் கலந்து கொண்டு 120 பேருக்கு தடுப்பூசி போட்டனர். இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோமதி, ஊராட்சி துணை தலைவர் சுகுணா, ஊராட்சி செயலர் செல்லதுரை மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News