ஆன்மிகம்
மணக்குள விநாயகர் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

மணக்குள விநாயகர் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

Published On 2021-04-26 07:42 GMT   |   Update On 2021-04-26 07:42 GMT
புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் கடந்த 2 தினங்களாக பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும் கோவிலில் வழக்கம் போல் சாமிக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தது.
புதுச்சேரியில் உலகப் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். புதுச்சேரியில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்து வருவதை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. அதன் ஒரு பகுதியாக புதுச்சேரியில் உள்ள அனைத்து மத வழிபாட்டு தலங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

அதன்படி புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் கடந்த 2 தினங்களாக பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும் கோவிலில் வழக்கம் போல் சாமிக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தது. இதே நடைமுறை புதுவையில் உள்ள பல்வேறு கோவில்களில் பின்பற்றப்பட்டது.
Tags:    

Similar News