செய்திகள்
கைது

ஆம்பூர் அருகே மது பாக்கெட்டுகள் கடத்திய 2 பேர் கைது

Published On 2021-06-05 15:30 GMT   |   Update On 2021-06-05 15:30 GMT
ஆம்பூர் அருகே மது பாக்கெட்டுகள் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர்:

ஆம்பூரை அடுத்த வடச்சேரி பகுதியில் நேற்று உமராபாத் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் கர்நாடக மாநில மது பாக்கெட்கள் கொண்டுவந்தது தெரியவந்தது. இதையடுத்து மோட்டார்சைக்கிளில் வந்த ஆம்பூர் அடுத்த மிட்டாளம் பகுதியை சேர்ந்த தாமரைக்கனி (வயது 28) மற்றும் கீழ் மிட்டாளம் பகுதியை சேர்ந்த விஜய் (25) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களிடமிருந்த மோட்டார் சைக்கிளையும், மது பாக்கெட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News