செய்திகள்
கோப்புப்படம்

திருச்சி விமான நிலையத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்

Published On 2021-08-04 10:56 GMT   |   Update On 2021-08-04 10:56 GMT
திருச்சி விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இரண்டாம் கட்டமாக தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.
கே.கே.நகர்:

திருச்சி விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு முகாம் நடத்தப்பட்டு சுமார் 200 ஊழியர்களுக்கு ஒரு தடுப்பூசி போடப்பட்டது.

இதனை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. இதில் 150 ஊழியர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை முன்னைய மேலாளர் சரவணன் உட்பட மருத்துவ குழுவினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News