ஆன்மிகம்
திருப்பத்தூரில் பூமாயி அம்மன் கோவிலில் பக்தர்கள் இன்றி பூச்சொரிதல்

திருப்பத்தூரில் பூமாயி அம்மன் கோவிலில் பக்தர்கள் இன்றி பூச்சொரிதல்

Published On 2021-05-03 08:21 GMT   |   Update On 2021-05-03 08:21 GMT
பூமாயி அம்மனுக்கு பால், சந்தனம், மஞ்சள், தயிர், பன்னீர் உள்ளிட்ட 16 விதமான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள செய்து பக்தர்கள் இன்றி பூச்சொரிதல் நடத்தப்பட்டது.
திருப்பத்தூரில் உள்ள பூமாயி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தற்போது கொரோனா தொற்று பரவலால் அரசு அறிவித்துள்ள விதிமுறைப்படி நேற்று பூமாயி அம்மனின் 87-ம் ஆண்டு பூச்சொரிதல் விழா நடந்தது.

இதையொட்டி அம்மனுக்கு பால், சந்தனம், மஞ்சள், தயிர், பன்னீர் உள்ளிட்ட 16 விதமான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள செய்து பக்தர்கள் இன்றி பூச்சொரிதல் நடத்தப்பட்டது.
Tags:    

Similar News