செய்திகள்
நகை பறிப்பு

செங்கல்பட்டு அருகே பெண்ணிடம் 6 பவுன் நகை பறிப்பு

Published On 2020-10-26 07:54 GMT   |   Update On 2020-10-26 07:54 GMT
செங்கல்பட்டு அருகே பெண்ணிடம் 6 பவுன் நகை பறித்த குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு:

செங்கல்பட்டு வேதாச்சலம் நகர் பகுதியை சேர்ந்தவர் சேகர். தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கயல்விழி (வயது 52). இவரது மகன் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். தனது மகனை பார்ப்பதற்காக கயல்விழி புதிய பஸ் நிலையம் அருகே தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது இரு சக்கர வாகனத்தில் மாஸ்க் அணிந்தபடி பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் கயல்விழி அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்து சென்றனர். இது குறித்து செங்கல்பட்டு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News