செய்திகள்
தர்மபுரியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பணம் வைத்து சூதாடிய 7 பேரை கைது செய்தனர்.
தர்மபுரி:
தர்மபுரி போலீசாருக்கு பணம் வைத்து சூதாடுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தர்மபுரி அக்ரஹாரத்தெரு ஆத்துமேடு பகுதியில் 2 பேர் சூதாடிக்கொண்டிருந்தனர். இதனை பார்த்த போலீசார் 2 பேரையும் பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் சுரேந்தர் மற்றும் காந்தி என தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அந்த 2 பேரையும் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து ஒரு சீட்டுக் கட்டு மற்றும் ரூ.2,000-ஐ பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று தர்மபுரி போலீசார் கொளத்தூர் ஏரி பகுதியில் சீராணன், குமார் ஆகிய இருவரையும், ராமக்காள் ஏரியில் கார்த்திக், அரவிந்த் மற்றும் ராஜதுரை ஆகிய 3 பேரையும் தர்மபுரி போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.2,500 பணம் மற்றும் இரண்டு சீட்டு கட்டிகள் பறிமுதல் செய்தனர்.