உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

சவுடு மண் அள்ளிய வாலிபர்கள் கைது

Published On 2022-05-05 07:29 GMT   |   Update On 2022-05-05 07:29 GMT
திருமலைராஜன் ஆற்றில் சவுடுமண் அள்ளிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
நன்னிலம்:

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அடுத்துள்ள நெம்மேலி, களப்பால் இருப்பை சேர்ந்தவர் தண்டபாணி. 

இவர் மருதுவாஞ்சேரி ஒத்தவீடு என்ற இடத்தில், திருமலைராஜன் ஆற்றில், ஏனங்குடி ஆற்றங்கரை சேர்ந்த வேணுகோபால் மகன் திவாகர் (20) ஜேசிபி ஓட்டுநரின் உதவியோடும், நெம்மேலி தெற்குதெரு கண்ணன் மகன் கண்ணதாசன் (22) என்பவரது டிராக்டரில் அரசு அனுமதியின்றி சவுடு மண் அள்ளியுள்ளனர். 

தகவலறிந்த பேரளம் போலீசார் விரைந்து வந்து, ஜேசிபி டிரைவர் திவாகர், டிராக்டர் டிரைவர் கண்ணதாசன் இருவரையும் கைது செய்தனர். தண்டபாணியை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News