செய்திகள்
கைது

வடமாநில வாலிபரிடம் கத்தி முனையில் பணம் பறித்த 2 பேர் கைது

Published On 2020-11-21 09:51 GMT   |   Update On 2020-11-21 09:51 GMT
வடமாநில வாலிபரிடம் கத்தி முனையில் பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டலூர்:

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சிவராம் பஸ்வால் (வயது 29). இவர் நல்லம்பாக்கம் பகுதியில் தங்கி அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் பாண்டூர் பஸ் நிறுத்தம் அருகே சாலையில் தனது நண்பருடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சிவராம் பஸ்வாலை வழிமறித்து அவரை கத்தி முனையில் மிரட்டி அவரிடம் இருந்த ரூ.2500-ஐ பறித்து கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இது குறித்து சிவராம் பஸ்வால் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்குப்பதிவு செய்து ஒடிசா வாலிபரிடம் வழிப்பறி செய்த பெருமாட்டுநல்லூர் கிராமத்தை சேர்ந்த கலைவாணன் (27), கன்னிவாக்கம் அண்ணா நகரை சேர்ந்த பாபு (31) ஆகியோரை கைது செய்தனர்.
Tags:    

Similar News