ஆட்டோமொபைல்
வேகன்ஆர்

தீவிர சோதனையில் புதிய வேகன்ஆர்

Published On 2019-09-09 11:27 GMT   |   Update On 2019-09-09 11:27 GMT
மாருதி சுசுகி நிறுவனத்தின் 2019 வேகன்ஆர் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.



2019 மாருதி வேகன்ஆர் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. ஏற்கனவே பலமுறை இதுபோன்ற புகைப்படங்கள் வெளியானது.

புதிய வேகன்ஆர் ஸ்டிங்கிரே மாடலில் மேம்பட்ட இன்டீரியர்கள், ஸ்மார்ட் பிளே ஸ்டூடியோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் வெளிப்புறமும் புதிய பம்ப்பர்கள், புதிய ஹெட்லைட் கிளஸ்டர், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய வேகன்ஆர் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் என்ஜின் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இது கே சீரிஸ் மற்றும் 1.0 லிட்டர் யூனிட் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 82 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 67 பி.ஹெச்.பி. செயல்திறன் வழங்குகின்றன.



இந்த என்ஜின்கள் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வருகின்றன. இத்துடன் 1.2 லிட்டர் வேரியண்ட்டில் மாருதியின் ஏ.ஜி.எஸ். ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இத்துடன் சி.என்.ஜி. வேரியண்ட் ஒன்றும் கிடைக்கிறது. புதிய வேகன்ஆர் ஸ்டிங்கிரே மாடலும் இதைபோன்ற என்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.

சமீபத்தில் மாருதி நிறுவனம் எக்ஸ்.எல்.6 என்ற பெயரில் புதிய எம்.பி.வி. காரை அறிமுகம் செய்தது. இது அந்நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் எர்டிகா மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. எக்ஸ்.எல்.6 கார் நெக்சா விற்பனையகங்களி்ல் விற்பனை செய்யப்படுகிறது. 

இதனால் புதிய வேகன்ஆர் காரும் நெக்சா விற்பனையகங்களில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர மாருதி நிறுவனம் மற்றொரு ஹேட்ச்பேக் காரை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. எஸ் பிரெஸ்ஸோ என்ற பெயரில் அறிமுகமாகும் இது ஆல்டோ மற்றும் செலரியோ மாடல்களுக்கு மத்தியில் நிறுத்தப்படும் என தெரிகிறது.

புகைப்படம் நன்றி: rushlane
Tags:    

Similar News