செய்திகள்
கைது

திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட திருச்செந்தூர் வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

Published On 2019-11-12 11:51 GMT   |   Update On 2019-11-12 11:51 GMT
திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட தூத்துக்குடியை சேர்ந்த 3 பேர் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் ரவுண்ட் ரோடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புகுந்து நகைகள் திருடியதாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் உள்ள சொக்கப்பழங்கரை பகுதியை சேர்ந்த பிச்சை மகன் மாரித்துரை (வயது20), அதே பகுதியை சேர்ந்த சிவபெருமான் மகன் முத்துதினேஷ் (20) ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர். 

இதேபோல் திருச்செந்தூர் அருகில் உள்ள சேதுகுவாய்த் தான் பகுதியை சேர்ந்த விஜயராஜ் மகன் சதீஷ் (21) என்பவர் பழனி அடுத்துள்ள சத்திரப்பட்டியில் நடந்து சென்ற ஒருவரிடம் ரூ.3 ஆயிரம் வழிப்பறி செய்தார்.

இவர்கள் 3 பேர் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால் இவர்களது குற்ற நடவடிக்கையை ஒடுக்கும் வகையில் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு, போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் பரிந்துரை செய்தார்.

கலெக்டர் உத்தரவை தொடர்ந்து அவர்கள் 3 பேரும் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News