செய்திகள்
பீர் பாட்டிலால் தாக்குதல்: பார் உரிமையாளர் காயம்
குடிபோதையில் பார் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து அங்கு வந்த பார் உரிமையாளர் செல்வராஜை, தகராறில் ஈடுபட்டவர்கள் பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர்.
பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நக்கசேலம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையையொட்டி பார் இயங்கி வருகிறது. இந்த பாரில் அடைக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த சிலர் மது அருந்தியுள்ளனர். அப்போது அவர்கள் குடிபோதையில் பார் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து அங்கு வந்த பார் உரிமையாளர் செல்வராஜை, தகராறில் ஈடுபட்டவர்கள் பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர். இதில் செல்வராஜிக்கு தலை மற்றும் கையில் காயம் ஏற்பட்டது. மேலும் பாரில் வேலை செய்தவர்களையும் தாக்க முயன்ற அந்த கும்பல், பாரின் மேற்கூரையையும் அடித்து நொறுக்கியுள்ளனர். அருகில் உள்ள டாஸ்மாக் கடை மீதும் பாட்டில் வீசப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் காயமடைந்த செல்வராஜ், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் அ.தி.மு.க.வில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் குறித்து பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.