உள்ளூர் செய்திகள்
நாகர்கோவில் அருகே தொழிலாளி தற்கொலை
தக்கலை அருகே தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்தார்.
நாகர்கோவில்:
பெருஞ்சிலம்பு அருகே பேயோட்டு விளை பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 70), கூலி தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று கணே சன் வீட்டில் தூக்கில் பிண மாக தொங்கினார். இது குறித்து அவரது மகன் மணிகண்டன் கொற்றிகோடு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கொற்றிகோடு போலீசார் வழக்கு பதிவு செய்து வருகிறார்கள்.