செய்திகள்
கொரோனா வைரஸ்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 47 பேருக்கு கொரோனா

Published On 2021-04-04 12:44 GMT   |   Update On 2021-04-04 12:44 GMT
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 47 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 47 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 12 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 8 ஆயிரத்து 593 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிகிச்சையில் குணமடைந்து 8 ஆயிரத்து 245 பேர் வீடு திரும்பி உள்ளனர். தற்போது 229 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 119 பேர் இறந்துள்ளனர்.
Tags:    

Similar News