செய்திகள்

போனில் நம்பர் பதிவு ஆனதால் ஆதார் தகவல்களை திருட முடியாது - அதிகாரிகள் தகவல்

Published On 2018-08-06 06:16 GMT   |   Update On 2018-08-06 06:16 GMT
செல்போன்களில் தானாக பதிவான பழைய அழைப்பு எண் பதிவை வைத்து எதுவுமே செய்ய முடியாது என்று அடையாள அட்டை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. #Aadhaarcard

புதுடெல்லி:

ஆதார் அடையாள அட்டை ஆணையத்துக்கு 1800-300-1947 என்ற இலவச அழைப்பு எண் இருந்தது.

தற்போது இந்த எண் எந்தவித பயன்பாட்டிலும் இல்லை. அதற்கு பதில் 1947 என்ற எண்ணை இலவச அழைப்பு எண்ணாக ஆதார் அட்டையாள அட்டை ஆணையம் வைத்துள்ளது.

இந்த நிலையில் ஆதார் ஆணையத்தின் பயன் பாட்டில் இல்லாத பழைய உதவி எண்ணை 1800-300-1947 செல்போன்களில் பதிவானது. தானாகவே அந்த எண் காண்டக்ட் சிலிட்டில் பதிவாகி விட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பொதுமக்கள் இது தொடர்பாக பயப்பட வேண்டியதில்லை என்று இந்திய தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் அறிவித்தது. “வேண்டாதவர்கள் யாரோ செய்த வேலை” என்று அவர்கள் தெரிவித்தனர்.

 


 

இந்த நிலையில் செல்போன்களில் தானாக பதிவான எண் மூலம் தனி நபர்களின் தகவல்களை தெரிந்து கொள்ள முடியும் என்று ஒரு தகவல் வெளியானது. இது செல்போன்களை பயன்படுத்துபவர்களிடம் கடும் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது.

தங்களைப் பற்றிய ரகசிய தகவல்கள் திருடப்பட்டு விடுமோ என்று பயந்தனர். ஆனால் அப்படி பயப்பட வேண்டியதில்லை என்று ஆதார் அடையாள அட்டை ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

பழைய அழைப்பு எண் பதிவை வைத்து எதுவுமே செய்ய முடியாது என்று அடையாள அட்டை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. #Aadhaarcard

Tags:    

Similar News