செய்திகள்
கைது நடவடிக்கை

புதுச்சேரி மதுபானங்களை தமிழக மதுபானங்களாக மாற்றி விற்பனை- 4 பேர் கைது

Published On 2019-10-15 03:26 GMT   |   Update On 2019-10-15 03:26 GMT
புதுச்சேரியில் தயாரிக்கப்பட்ட மதுபானங்களை தமிழக மதுபானங்களாக மாற்றி விற்பனை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார்குடி:

மன்னார்குடி பகுதியில் போலி மதுபானங்கள் பார்களில் விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மதுவிலக்கு பிரிவு போலீசார் பார்களில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களை கண்காணித்தனர்.

அப்போது, புதுச்சேரியில் தயாரிக்கப்படும் மதுபானங்களை வாங்கி வந்து, தமிழக மதுபாட்டில்களில் நிரப்பி டாஸ்மாக் மதுபானம் போன்று மாற்றி விற்பனை செய்தது தெரியவந்தது.



இந்த மோசடி விற்பனை தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள், ஒரு கார் சர்வீஸ் நிறுவனத்தில் மதுபானங்களை, காலி பாட்டில்களில் நிரப்பி வந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபானங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News