செய்திகள்
கோப்புபடம்

ராமநாதபுரம் அருகே மதுவிற்ற 10 பேர் கைது

Published On 2020-10-18 12:56 GMT   |   Update On 2020-10-18 12:56 GMT
ராமநாதபுரம் அருகே மதுவிற்ற 10 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 99 மதுபாட்டில்களையும், மதுவிற்பனை செய்து வைத்திருந்த ரூ.3 ஆயிரத்து 800-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் கள்ளத்தனமாக மதுவிற்பனை செய்வதை தடுக்கும் வகையில் மாவட்ட மதுவிலக்கு போலீசார் மற்றும் அந்தந்த பகுதி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

இதன்படி நேற்றுமுன்தினம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கள்ளத்தனமாக மதுவிற்பனை செய்ததாக 10 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 99 மதுபாட்டில்களையும், மதுவிற்பனை செய்து வைத்திருந்த ரூ.3 ஆயிரத்து 800-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News