செய்திகள்
மதுரையில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 8 பவுன் நகை பறிப்பு
மோட்டார் சைக்கிளில் கணவருடன் சென்ற பெண்ணிடம் 8 பவுன் நகையை பறித்து சென்ற வழிப்பறி கொள்ளையர்கள் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
மதுரை:
மதுரை மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் மயில் முருகன். இவரது மனைவி சரண்யா (வயது32). நேற்று மயில்முருகன், அவரது மனைவி சரண்யா மற்றும் குழந்தைகளுடன் மோட்டார் சைக்கிளில் ஒத்தக்கடை பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர்.
ஒத்தக்கடையில் இருந்து திருவாதவூர் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது பின்னால் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் சரண்யா கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி விட்டனர்.
இதுகுறித்து ஒத்தக்கடை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.