செய்திகள்
பொன்னமராவதி அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை
பொன்னமராவதி அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னமராவதி:
பொன்னமராவதி ஒன்றியம், ஏனாதி ஊராட்சி பிடாரம்பட்டியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி செண்பகம். இவரது மகள் ராஜாத்தி (வயது 26). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. கணவன்-மனைவிக்கு இடையே அவ்வப்போது குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த ராஜாத்தி தனது வீட்டின் பின்புறம் உள்ள மாட்டுக் கொட்டகையில் நேற்று முன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.