செய்திகள்
செங்கம் அருகே வாகனம் மோதி பெண் பலி
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே வாகனம் மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கம்:
செங்கம்- திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் கரியமங்கலம் பகுதியில் தனியார் பால்பண்ணை அருகே நேற்று இரவு கட்டமடுவு-குட்டை பகுதியை சேர்ந்தவர் கல்பனா (வயது32). இளங்குன்னி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (36) உள்ளிட்ட இருவரும் பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக அடையாளம் தெரியாத வாகனம் இவர்கள் சென்ற பைக் மீது மோதியது.
பைக்கில் வந்த இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் கல்பனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் கோவிந்தராஜ் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த கல்பனாவின் உடலை மீட்டு செங்கம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கம்- திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் கரியமங்கலம் பகுதியில் தனியார் பால்பண்ணை அருகே நேற்று இரவு கட்டமடுவு-குட்டை பகுதியை சேர்ந்தவர் கல்பனா (வயது32). இளங்குன்னி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (36) உள்ளிட்ட இருவரும் பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக அடையாளம் தெரியாத வாகனம் இவர்கள் சென்ற பைக் மீது மோதியது.
பைக்கில் வந்த இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் கல்பனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் கோவிந்தராஜ் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த கல்பனாவின் உடலை மீட்டு செங்கம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.