செய்திகள்
கைது

அய்யம்பேட்டை அருகே செல்போன் திருடிய வாலிபர் கைது

Published On 2020-09-16 09:38 GMT   |   Update On 2020-09-16 09:38 GMT
அய்யம்பேட்டை அருகே செல்போன் திருடிய வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
அய்யம்பேட்டை:

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே சக்கராப்பள்ளி எஸ்.தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சாதிக்பாட்சா மகன் யாசர் அரபாத் (வயது21). இவர் சம்பவத்தன்று அதே பகுதியில் சாலை ஓரமாக நின்று செல்போனில் பேசி கொண்டிருந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் யாசர் அரபாத் வைத்திருந்த செல்போனை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து அய்யம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் அய்யம்பேட்டை போலீசார் பஸ் நிறுத்தம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை போலீசார் சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கரூர் அருகம்பாளையத்தை சேர்ந்த நேதாஜி மகன் ரஞ்சித் (வயது19) என்பதும், யாசர் அரபாத்திடம் செல்போனை பறித்து சென்றதும், மேலும் சிலரிடம் செல்போன் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து ரஞ்சித்தை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News