செய்திகள்
கொள்ளிடம் அருகே மதுபோதையில் விஷம் குடித்தவர் உயிரிழப்பு
கொள்ளிடம் அருகே வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
கொள்ளிடம்:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே வேட்டங்குடி கிராமம் மெயின் ரோட்டை சேர்ந்த பாஸ்கரன் மகன் பேரரசன் (வயது 28). திருமணமாகாத இவர், தினமும் மதுகுடித்துவிட்டு போதையிலேயே இருந்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மது போதையில் இருந்த அவர், வீட்டில் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து விட்டார். இதனால் ஆபத்தான நிலையில் இருந்த அவரை சிகிச்சைக்காக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பேரரசன் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த புதுப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.