செய்திகள்
யோகேந்திர யாதவ்

குடியரசு தினத்தன்று டிராக்டர்கள் பேரணி அமைதியான முறையில் நடைபெறும்: யோகேந்திர யாதவ்

Published On 2021-01-24 12:14 GMT   |   Update On 2021-01-24 12:14 GMT
குடியரசு தினத்தன்று டிராக்டர்கள் பேரணி அமைதியான முறையில் நடைபெறும் என ஸ்வாராஜ் இந்தியாவின் யோகேந்திர யாதவ் தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்கள் தொடர்பான பேச்சுவார்த்தை இன்னும் முடிவை எட்டவில்லை. இதனால் தொடர்ந்து போராடி வரும் விவசாயிகள் குடியரசு தினத்தன்று ஒரு லட்சம் டிராக்டர் பேரணி நடைபெறும் என அறிவித்துள்ளனர்.

இந்த பேரணிக்கு உச்சநீதிமன்றம் தடைவிதிக்க மறுத்துவிட்டது. டெல்லி போலீஸும் அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில் ஸ்வாராஜ் இந்தியாவின் யோகேந்திர யாதவ் கூறுகையில் ‘‘இன்று டெல்லி போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. டிராக்டர் பேரணிக்கு நாங்கள் அனுமதி பெற்றுள்ளோம். நான் ஏற்கனவே, 26-ந்தேதி அமைதியான முறையில் பேரணி நடைபெறும் என்று கூறியிருந்தேன்’’ என்றார்.

அதேவேளையில் டெல்லி போலீஸ் கமிஷனர் அனைத்து ‘‘குடியரசு தினவிழா பேரணிக்காக குவிக்கப்பட்டுள்ள அதிகாரிகளும், சிஏஎஃப் மற்றும் பாதுகாப்புப்படை வீரர்களும் பேரணி தொடர்பான சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டால் உடனடியாக தயார் நிலையில் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News