செய்திகள்
விக்கிரமராஜா

பழம், மலர், நாட்டு மருந்துக்கடை திறக்க அனுமதி: மு.க.ஸ்டாலினுக்கு விக்கிரமராஜா நன்றி

Published On 2021-05-13 03:59 GMT   |   Update On 2021-05-13 03:59 GMT
பழம், மலர் மற்றும் நாட்டு மருந்து கடைகளை பகல் 12 மணி வரை திறந்திருக்க அனுமதி அளித்திருப்பதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பேரமைப்பு தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றது.
சென்னை :

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பதவி ஏற்ற 2-ம் நாளிலேயே, வணிகப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி, தீர்க்கமான தீர்வுகள் காண விடுமுறை தினம் என்றும் பாராமல், அதிகாரிகளையும் அழைத்து, கலந்தாய்வு செய்து, வணிகர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண முனைந்திருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தனது பாராட்டுகளையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கின்றது.

எங்கள் கோரிக்கையினை ஏற்று பழம், மலர் மற்றும் நாட்டு மருந்து கடைகளை பகல் 12 மணி வரை திறந்திருக்க அனுமதி அளித்திருப்பதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பேரமைப்பு தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News