செய்திகள்
தற்கொலை

திருக்காட்டுப்பள்ளி காவிரி ஆற்றில் விஷம் குடித்து கணவன்-மனைவி தற்கொலை

Published On 2021-03-25 09:30 GMT   |   Update On 2021-03-25 09:30 GMT
திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவன்- மனைவி இருவரும் ஏன் தற்கொலை செய்து கொண்டனர்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருக்காட்டுப்பள்ளி:

அரியலூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் காலனி தெருவை சேர்ந்தவர் முத்துசாமி(வயது 68). இவருடைய மனைவி பாஞ்சாலை(65). இவர்களுக்கு 2 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களில் ஒரு மகனுக்கு தண்டுவட பாதிப்பு காரணமாக படுத்த படுக்கையாக இருந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் பாஞ்சாலைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் முத்துசாமியும், பாஞ்சாலையும் கடந்த 21-ந் தேதி தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு தஞ்சைக்கு வந்தனர்.

திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள புதுச்சத்திரம் பயணியர் விடுதி எதிரே உள்ள காவிரி ஆற்று படித்துறைக்கு வந்த கணவன்-மனைவி இருவரும் அங்கு விஷம் குடித்து மயங்கி விழுந்து இறந்தனர். நேற்று மதியம் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் 2 பேர் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து இது குறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கணவன்-மனைவி இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவன்- மனைவி இருவரும் ஏன் தற்கொலை செய்து கொண்டனர்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News