செய்திகள்
சேத்தூர் அருகே இலவச மருத்துவ முகாம்
சேத்தூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் அன்னை சிவகாமி தொடக்கப்பள்ளியில் தமிழக அரசின் சிறப்பு இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
தளவாய்புரம்:
சேத்தூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் அன்னை சிவகாமி தொடக்கப்பள்ளியில் தமிழக அரசின் சிறப்பு இலவச பொது மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கருணாகர பிரபு தலைமையில் 12 மருத்துவர்கள், 50 செவிலியர்கள் அடங்கிய குழுவினரால் நடத்தப்பட்டது.
முகாமில் தைராய்டு, சர்க்கரை நோய், தொழுநோய் உள்பட பல்வேறு நோய்களுக்கு இலவச பரிசோதனையும், சிகிச்சையும் அளிக்கப்பட்டது. முகாமில் 432 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.