செய்திகள்
கோப்புப்படம்

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா

Published On 2021-01-23 20:31 GMT   |   Update On 2021-01-23 20:31 GMT
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
விருதுநகர்:

மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,535 ஆக உயர்ந்துள்ளது. 16,249 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 1,330 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 2,965 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படுவதில் ஏற்படும் தாமதம் தவிர்க்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தாலும் அதற்கான நடவடிக்கை எடுப்பதற்கு வாய்ப்பில்லாத நிலை தொடர்கிறது. இதனால் மாவட்டம் நோய் பாதிப்பில் இருந்து முற்றிலும் விடுபடாத நிலை உள்ளது.
Tags:    

Similar News