செய்திகள்
மரணம்

கேரளாவில் மழைக்கு கட்டிடம் இடிந்து விழுந்து 2 பேர் பலி

Published On 2019-09-07 04:56 GMT   |   Update On 2019-09-07 04:56 GMT
கேரளாவில் மழைக்கு கட்டிடம் இடிந்து விழுந்து 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பரமூர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்(வயது 40). அதேபகுதியை சேர்ந்த மோகன்பிள்ளை மகன் அருண்லால்(32). இவர்களது நண்பர்கள் சுதி(23), விஷ்ணு(18).

இவர்கள் 4 பேரும் நேற்று இரவு 10 மணியளவில் அந்த பகுதியில் உள்ள சிவன் கோவில் அருகே இருக்கும் கட்டிடத்தில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது அங்கு பலத்த மழை பெய்து கொண்டிருந்தது.

மழை காரணமாக அந்த கட்டிடத்தின் உள்பகுதி இடிந்து கீழே விழுந்தது. இதில் 4 பேரும் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் சம்பவம் குறித்து பரமூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்ட 4 பேரையும் மீட்டனர்.

இதில் ரஞ்சித், அருண்லால் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர் உயிரிழந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொல்லம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய சுதி மற்றும் விஷ்ணுவை மீட்டு பாரிபள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பரமூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News